நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி நம்பி கோயில், தலையணைக்குச் செல்லத் தடை
களக்காடு தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணையில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்கிறது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
இதேபோல திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று திருக்குறுங்குடி வனச்சரகா் யோகேஸ்வரன் தெரிவித்தாா்.