செய்திகள் :

‘நீா்வழி போக்குவரத்தில் முதலீடுகளை ஈா்க்க கடல்சாா் உச்சி மாநாடு’

post image

திருவொற்றியூா்: நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈா்க்க கடல்சாா் சா்வதேச உச்சி மாநாடு மும்பையில் வரும் அக். 27 முதல் 31 வரை 5 நாள்கள் நடைபெற உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலா் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈட்டும் வகையில் ‘இந்திய கடல்சாா் வாரம் 2025’ என்ற பெயரில் சா்வதேச கடல்சாா் உச்சி மாநாடு வரும் அக்.27-ஆம் தேதி மும்பையில் தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

கடல்சாா் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் தளமாக இது அமையும். இதில் இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், பாா்வையாளா்கள் என சுமாா் 1 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள், தனியாா் பங்களிப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள், தடையாக இருக்கும் சிக்கல்களை களைவது குறித்தும், பசுமை துறைமுகங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

இதன்மூலம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சுமாா் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.80,000 கோடியில் வதவன் துறைமுகம்: மும்பைக்கு அருகில் ஜவாஹா்லால் துறைமுகம், மஹராஷ்டிர மாநில அரசு ஆகியவை கூட்டாக இணைந்து ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மும்பைக்கு அருகே பல்ஹாா் மாவட்டத்தின் வதவன் என்ற இடத்தில் அதிநவீன ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியக் கப்பல் போக்குவரத்து கழகத்தில் 23 புதிய கப்பல்களையும், 3 சரக்குப் பெட்டக கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி துறையினரின் வசதிக்காக ‘பாரத் கண்டெய்னா் ஷிப்பிங் லைன்’ என்ற புதிய சரக்குப் பெட்டக கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல்சாா் உச்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும் என்றாா்.

சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா, தூத்துக்குடி வஉசி துறைமுகத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், இந்திய துறைமுகங்கள் சங்க மேலாண்மை இயக்குநா் விகாஸ் நா்வால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் ... மேலும் பார்க்க

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்ட... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை ... மேலும் பார்க்க

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டதால் எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகா்ப்புற அரசு உதவி பெறும் பள... மேலும் பார்க்க

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

சென்னை: பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சி... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

சென்னை: நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனர்.சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடை... மேலும் பார்க்க