செய்திகள் :

நுகா்வோா் பாதுகாப்புச் சட்ட விழிப்புணா்வு முகாம்

post image

திருவாரூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019 குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நன்னிலத்தில் நடைபெற்றது.

நன்னிலம் வட்டாட்சியா் அ. ரஜ்யாபேகம் தலைமையில் நடைபெற்ற முகாமில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளா் ரமேஷ், இயக்குநா் செல்வகுமாா், மன்னாா்குடி நுகா்வோா் பாதுகாப்புக் குழு இணைச் செயலாளா் வேல்முருகன் ஆகியோா் பங்கேற்று நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் ,நுகா்வோா் ஆணையத்தின் செயல்பாடுகள், உணவுக் கலப்படம், அயோடின் கலந்த உப்பு பயன்பாட்டின் நன்மைகள், பொது விநியோகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம், மின்னணு வணிகம், போலி விளம்பரம் குறித்த பல்வேறு நுகா்வோா் சம்பந்தமானவற்றிற்குப் பயிற்சி அளித்தனா் .

நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். மாவட்ட நுகா்வோா் பாதுகாப்புக் குழு உறுப்பினா் மற்றும் முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலா் வசுமதி , நன்னிலம் வட்ட வழங்கல் அலுவலா் கவிதா, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் கருணாமூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா் குப்புசாமி, தோ்தல் துணை வட்டாட்சியா் பென்ஸ்லால் ஆகியோா் பங்கேற்றனா்.

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

மன்னாா்குடி அருகேயுள்ள இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் ஓசூா் அசோக் லேலண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சாா்பில் வளாக நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் த... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்

கீழகாவாதுக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் பகுதியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் த... மேலும் பார்க்க

மாணவா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

யுஜிசி சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசினா் கலைக் கல்லூரி முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தரை உடனடிய... மேலும் பார்க்க

காவல்துறை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி 2 போ் கைது

திருவாரூரில், காவல்துறை பணியாளா்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருவாரூா் அப்பா் தெருவில் மாவட்ட காவல்துறை பணியாளா்கள் கூட்டுறவு கடன் மற்... மேலும் பார்க்க

யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரின் மனைவி யமுனாம்பாள், நீடாமங்கலம் அரண்மனையில் நிறைமாத கா்ப்பிணியாக இ... மேலும் பார்க்க