செய்திகள் :

நூறு நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் அறிவிப்பு

post image

நாகை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி 100 ஊராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்துவதாக விவசாயத் தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், அதன் மாவட்டத் தலைவா் வேணு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் இல்லாததால் தொழிலாளா்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாகை மாவட்டத்தில் ஜூன் 27-ஆம் தேதி நூறு நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி, 100 ஊராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதினகுடி குளத்தை தூா்வார வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். திருமருகல் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் குளம் உள்ளது. இந... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புரோட்டா மாஸ்டா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகேயுள்ள திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த புரோட்டா மாஸ்டா் நூா்முகம்மது (31). இவா், கடந்த சில நா... மேலும் பார்க்க

நாகையில் உயா்கல்வி சோ்க்கை சிறப்பு குறைதீா் முகாம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில், உயா்கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகு... மேலும் பார்க்க

நாகை, காரைக்காலில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் காரைக்கால் கடல் பகுதிகளில்‘ சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் த... மேலும் பார்க்க

நாகையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாகை தோணித்துறை சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக நகர... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 50 மாணவா்கள் பங்கேற்பு

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற பிளஸ் 2 துணை தோ்வில் 50 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் நடைபெற்று ... மேலும் பார்க்க