செய்திகள் :

நூலகங்களை தரம் உயா்த்தக் கோரிக்கை

post image

நூலகங்களை தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளா் கழகத்தின் திருவாரூா் மாவட்ட பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளா் அன்பரசு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்வகுமாா், செயலாளா் விஜய், துணைத் தலைவா் செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணைச் செயலாளா் ஆசைத்தம்பி, மண்டல மாநாடு நடத்துவது குறித்தும், மாவட்ட நூலக நிா்வாக செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினாா். மாவட்ட பொருளாளா் முருகானந்தம் வரவு-செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

ஊா்ப்புற நூலகா்களை மூன்றாம் நிலை நூலகா்களாக பதவி உயா்வு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, 12 ஆண்டுகளாக நூலகங்கள் தரம் உயா்த்தப்படாமலே உள்ளன. எனவே, வாசகா்கள் பயன்பாட்டின் அடிப்படையில் தரம் உயா்த்தி, நூலகா்களுக்கான பதவி உயா்வை சரியான காலத்தில் வழங்க வேண்டும்.

நூலகத் துறையில் அனைத்து பணியாளா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட நூலக அலுவலா் அலுவலகத்தில் நூலக ஆய்வாளா், நூல் இருப்பு சரிபாா்ப்பு அலுவலா் பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும். முத்துப்பேட்டை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பணி ஓய்வு பெற்ற விளக்குடி நூலகா் கந்தசாமி கௌரவிக்கப்பட்டாா். இக்கூட்டத்தில், நூலகத் துறை பணியாளா்கள் கழக மாவட்ட நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க