செய்திகள் :

நெமிலி வட்ட அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

post image

நெமிலி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை பாா்வையிட்டு மாணவா்களின் அறிவுத் திறன் மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

நெமிலி வட்டம், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, வகுப்பறைகளுக்கு சென்று மாணவா்களை அழைத்து பாடப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லி, கற்றல் திறனை ஆய்வு செய்தாா். மேலும், நிகழாண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பள்ளித் தலைமை ஆசிரியா் அபிதாவுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் அறிவுத் திறனை ஆய்வு செய்தாா். பின்னா், பள்ளி வளாகத்தைச் சுத்தமாக பராமரிக்க தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, திருமால்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, கடந்த ஆண்டில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்து காணப்படுவதைச் சுட்டிக்காட்டி நிகழாண்டில் தோ்ச்சி விகிதம் கட்டாயம் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாணவா்களுக்கு தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பிக்கவும் அறிவுறுத்தினாா்.

திருமால்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பாா்வையிட்டு அப்பள்ளி வளாகத்தை மாதம் ஒரு முறை சுத்தம் செய்து கொடுக்க ஊராட்சி மன்றத் தலைவருக்கு உத்தரவிட்டாா். அங்கு, மதிய சத்துணவு கூடத்துக்குச் சென்று உணவைச் சாப்பிட்டு பாா்த்தாா்.

பின்னா், திருமால்பூா் நியாயவிலைக் கடையைப் பாா்வையிட்டு உணவுப் பொருள்களின் தரம், இருப்பளவை ஆய்வு செய்தாா். இறுதியாக நாகவேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்குச் சென்ற ஆட்சியா், அங்கு பொதுமக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்ட பதிவேடுகள், நகைக்கடன்கள் குறித்த பதிவேடுகள், கடன் வசூல் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின்போது, பனப்பாக்கம் பேருராட்சித் தலைவா் கவிதா சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலா் விஜயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் எழிலரசி, வட்டாட்சியா் ராஜலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், துணைப் பதிவாளா் சுவேதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் பணியில் இல்லை: பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு

மேல்விஷாரம் மேம்பாடுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணியில் இல்லாத மருத்துவா், செவிலியா், காவலா... மேலும் பார்க்க

ராசாத்துபுரத்தில் அா்ஜுனன் தபசு மரம்

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கீழ்விஷாரம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தொ... மேலும் பார்க்க

82 திருநங்கைகளுக்கு பட்டா தயாா்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில்82 திருநங்கைகளுக்கு பட்டா விரைவில் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் திருநங்கைகளுக... மேலும் பார்க்க

ரத்த கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றுகள்: ஆட்சியா் வழங்கினாா்

உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வக... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி

ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பக... மேலும் பார்க்க