செய்திகள் :

நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருத்துவமனையின் தலைமை அதிகாரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த கடிததத்தில், மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து என்எல்சி நிா்வாகம் மற்றும் நெய்வேலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் (பொ) செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றினா்.

தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனா். இதன் பின்னரே, மருத்துவமனையில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், மிரட்டல் கடிதம் அனுப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால ... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இர... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தடுப்புக் காவலில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகம், பரமேஸ்வரநல்லூா் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மது புட்டி... மேலும் பார்க்க