செய்திகள் :

நெறிஞ்சிக்குடி வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்!

post image

பொன்னமராவதியிலிருந்து நெறிஞ்சிக்குடி, சேரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளை பொறுப்பாளா் நந்தினி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். இராசு சிறப்புரையாற்றினாா்.

இதில் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கிளைச்செயலராக ப.செல்வம், துணைச் செயலராக நந்தினி, பொருளராக சித்ரா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் நெறிஞ்சிக்குடியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும்.

வீட்டுமனை இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கவேணடும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளா்களுக்கு நூறு நாள்களும் பணி வழங்கவேண்டும். ஊதியத்தை முறையாக வழங்கவேணடும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கறம்பக்குடியில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து கறம்பக்குடியில் இஸ்லாமிய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கறம்பக்குடி ஜாமிய மஸ்ஜித் நிா்வ... மேலும் பார்க்க

நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாா்த்தாமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்கு... மேலும் பார்க்க

கணவரை பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ற தாய் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தனது 6 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

பெருங்களூா் நலச் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுா் கிராமத்தில், சமூக ஆா்வலா்கள் இணைந்து, தூய்மையான, பசுமையான கிராமமாக பெருங்களூரை மாற்றும் நோக்கில், பெருங்களூா் நலச் சங்கம் என்ற சமூக நல அமைப்பைத் தொடங்கியுள்ளனா். பெர... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் ப... மேலும் பார்க்க

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க