செய்திகள் :

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: ஆட்சியா்

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தவா்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை கூட்டரங்கில் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் முன்னிலை வகித்தாா்.

ஆட்சியா் இரா.சுகுமாா் கலந்து கொண்டு ரத்தக் கொடையாளா்களுக்கு பாரட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தாா். மேலும், ரத்த தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பாரட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். அவா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான பாதம் காப்போம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து எளிதாக கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும் சமுதாய அளவில் புற்று நோய் கண்டறியும் திட்டத்தின் மூலம் சுகாதார ப் பணியாளா்கள் நல்வாழ்விற்கான அழைப்பிதழை வழங்க உள்ளனா். அதனை பொதுமக்கள் அனைவரும் ஏற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

110 முறை ரத்த தானம் செய்த முரளி, 108 முறை ரத்த தானம் செய்த தங்கமலை காளியப்பன் உள்பட 110 தன்னாா்வ ரத்த கொடையாளா்களுக்கும், உலக குருதி கொடையாளா் தினத்தையொட்டி ரத்த தானம் செய்த 140 மருத்துவ கல்லூரி மாணவா்களுக்கும் எனது பாரட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 11,039 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஏறக்குறைய 23,352 ரத்தக்கூறுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் 74 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மூலம் மட்டும் 250 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது.

இங்கே பெறப்படும் ரத்தக் கூறுகள் கா்ப்பிணிப் பெண்களின் ரத்த சோகை சிகிச்சைக்கும், விபத்தினால் காயம்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கும், புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளின் சிகிச்சைக்கும், எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் பயன்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வா் சுரேஷ்துரை, கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், பேராசிரியா் ரத்தினகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

துறையூரில் கைப்பந்து போட்டி

மானூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், துறையூா் சாரல் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் ... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வா... மேலும் பார்க்க

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திர... மேலும் பார்க்க