செய்திகள் :

நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன்; நடந்தது என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவீன்குமாரின் தந்தை சந்திரசேகரை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு முதல்வர மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் வைத்து சந்தித்திருக்கிறார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.

கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் பாதுகாப்பும் வேண்டும், ஆணவப்படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்குமார்
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்குமார்

முதல்வர் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கவின்குமாரின் தந்தை சந்திரசேகர் "கவினைக் கொலை செய்தவர்களின் இரண்டு பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை, அவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். தைரியமாக இருங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்" என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன் "கவின்குமாரின் குடும்பத்துக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாததால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேசமயம் கவின்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். மேலும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இதனை தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது" என்றார்.

தொடர்ந்து, "தூய்மைப் பணியாளர்கள் விஷயத்தில் நான் சொன்னதைச் சில பேர் தவறாக விமர்சிக்கிறார்கள். தனியார்மயம் ஆக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். ஆனால் அந்தத் தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும்தான் என்கிற வகையில் நிரந்தரப்படுத்திவிடக் கூடாது. எந்திரமயப்படுத்த வேண்டும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி அவர்களை மீள செய்ய வேண்டும்" என்றார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், "ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி வலுவான கோரிக்கைகளை முன்வைக்கின்றன தி.மு.க கூட்டணிக் கட்சிகள். ஆனால் தேர்தல் நேரம், சமூக வாக்குகளுக்குப் பாதிப்பு வந்துவிடும் எனக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறது தி.மு.க" என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோயிலாறு அணை. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை மாவட்டத்தின் மிக... மேலும் பார்க்க

கர்நாடகா: ஒரே எண்ணில் 4 ஆடம்பர கார்கள், ஆன்லைன் பந்தயத் தளங்கள்; காங்கிரஸ் MLA கைதின் பின்னணி என்ன?

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரேந்திரா, “பப்பி” என அழைக்கப்படும் இவர், சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய வியாபாரம் மற்றும் பணமோசடி வழக்கில் சிக்கி அமலாக்க இயக்குநரால் (ED) ஆகஸ்... மேலும் பார்க்க

``தூய்மைப் பணியாளர்கள் வரலட்சுமி உயிரிழப்பு; அரசின் அலட்சியம்தான் காரணம்'' - சீமான் குற்றச்சாட்டு

சென்னைகண்ணகிநகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 23) மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும... மேலும் பார்க்க

`தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் வீட்டுவிடுங்கள்'- சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கடந்த 11ம் தேதி டெல்லி தெருநாய்கள் விவகாரத்தில் பிறப்பித்திருந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தெருநாய்களை பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்கும்படி உத்தரவிட்ட... மேலும் பார்க்க

``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்

`பிடித்த இடத்திலேயே விட வேண்டும்'தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டத் தடை; 3 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்... ஆனாலும், காத்திருக்கும் ஆபத்துகள்!

ஆன்லைன் விளையாட்டுகள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, பணம் கட்டுவதும், பணம் சம்பாதிப்பதுமாக மாறிய பிறகு, மாணவர்கள் முதல் முதியோர் வரை அதற்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக்கை பல கோடி. விளையாடுபவர்களின் ப... மேலும் பார்க்க