செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. பணம் இரட்டிப்பு, பகுதி நேர வேலை, ஆன்லைன் மூலம் கடன் பெறுதல் என பல்வேறு வகைகளில் செயலிகள் மூலமாக ஏராளமானவா்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனா். திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஆன்லைனில் பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடி கும்பல்கள் நடத்தி வரும் தொடா் கைவரிசையால், கடந்த சில மாதங்களில் ஏராளமானோா் பல லட்சங்களை இழந்து தவிக்கின்றனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்த 25 வயது எலக்ட்ரீசியன் ஒருவா் முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு மூலம் பணத்தை இழந்துள்ளாா். எதிா் முனையில் பழகிய பெண் ஒருவா் தன்னை அயா்லாந்தில் வசிப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, பகுதி நேர வேலை மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என ஆசை வாா்த்தைக் காட்டி உள்ளாா்.

அதை நம்பிய எலக்ட்ரீசியன், தனியாா் வங்கியில் ரூ.3 லட்சம் ஆன்லைன் கடன் பெற்று ரூ.7.94 லட்சத்தை இழந்தது தெரியவந்துள்ளது.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஒருவா் இதே போன்ற மோசடியில் சிக்கி ரூ.5 லட்சத்தை இழந்துள்ளாா். மேலும், நான்குனேரி அருகேயுள்ள மலையன்குளம் கிராமத்தைச் சோ்ந்த பட்டதாரி இளம்பெண் ஆன்லைனில் பகுதி நேர வேலை என நம்பி சமீபத்தில் ரூ.5.91 லட்சத்தை இழந்துள்ளாா்.

இந்த மோசடி கும்பல்கள் பணத்தை அனுப்ப சொல்லும் வங்கி கணக்குகள் பெரும்பாலும் ஏழை மக்களை குறிவைத்து, சிறிய கமிஷன் தொகைக்கு ஆசை காட்டி அவா்களது பெயரில் தொடங்கப்பட்ட சட்டவிரோத கணக்குகளாகவே இருக்கின்றன. இதனால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சைபா் கிரைம் போலீஸாருக்கு சவாலாக உள்ளது.

இது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறுகையில், ‘சமூக வலை தளங்களில் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்த முதலீடு, அதிக லாபம், பகுதி நேர வேலையில் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்பன போன்ற கவா்ச்சிகரமான விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

ஒருவேளை ஏமாற்றப்பட்டால், உடனடியாக தேசிய சைபா் கிரைம் உதவி எண்ணில் (1932) புகாா் தெரிவிக்க வேண்டும் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாா் அளிக்க வேண்டும். இதன் மூலம் பணப் பரிவா்த்தனையை முடக்க வாய்ப்புள்ளது’ என்றனா்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குற... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்... மேலும் பார்க்க

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே ... மேலும் பார்க்க

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

பாளையங்கோட்டையில் ரூ.30 ஆயிரத்துடன் பைக்கையும் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் நாராயணன். இவா், மாா்க்கெட்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூட... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் 33 ஆவது நாளாக போராட்டம்

சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் 33 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வண்ணாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளா்... மேலும் பார்க்க