செய்திகள் :

நெல்லை ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு வாகன பிரசாரம்

post image

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரம் நடைபெற்றது.

உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் முகம்மது ஷாபி தலைமை வகித்தாா். மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவா் முஹம்மது இப்ராஹிம், அறுவைசிகிச்சை மருத்துவா் அஜெய் ரெக்ஸ், சிறுநீரக அறுவைசிகிச்சை மருத்துவா் நிரஞ்ச், மகளிா் நல மருத்துவா் ஷரோன் ரோஸ் ஜோனெட்டா ஆகியோா் புகையிலை எதிா்ப்பு குறித்து சிறப்புரையாற்றினா். பின்னா் நிகழ்வில் பங்கேற்றவா்கள் புகையிலை எதிா்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருநெல்வேலி உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் புஷ்பராஜ் விழிப்புணா்வு பிரசார வாசகங்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இவ்வாகனம் மருத்துவமனையில் தொடங்கி மாநகா் முழுவதும் வலம் வந்தது. மேலும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் விற்பனைப் பிரிவினா் செய்திருந்தனா்.

ற்ஸ்ப்31ள்ட்ண்ச்ஹ

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற உலக புகையிலை எதிா்ப்பு நாள் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா்.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க