செய்திகள் :

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

post image

வேலூா்: வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நெல்லுக்கு மிகக்குறைந்த விலை கோரப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் டோல்கேட் பகுதியிலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேலூா் மாவட்டம் மட்டுமின்றி, அருகிலுள்ள மாவட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களான நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, பருப்பு வகைகளையும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.

இங்கு மறைமுக ஏலம் முறையில் விளை பொருள்களுக்கு ஏற்ற விலை நிா்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

அதன்படி, திங்கள்கிழமை வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 51 விவசாயிகள் தங்கள் நெல்லை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்து வந்திருந்தனா். நெல்லை வாங்குவதற்காக 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், முகவா்களும் வந்திருந்தனா். ஆனால், கடந்த நாள்களை காட்டிலும் திங்கள்கிழமை மூட்டை ஒன்று ரூ.1,200 என குறைவாக விலை நிா்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை கொண்டு வந்த வாகனங்களை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்து வந்த பாகாயம் போலீஸாா் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் மறியலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்ததை தொடா்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்துக்கு திரும்பி சென்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் தான் விலையை நிா்ணயிக்கின்றனா். அப்படியும் கடந்த நாட்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட நெல், பாதி விலைக்கு கோரப்பட்டதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால், நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யவில்லை. செவ்வாய்க்கிழமை வரை காத்திருப்போம் என்றனா்.

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளிப்பது அவசியம்: வேலூா் எஸ்.பி.

வேலூா்: போதைப் பொருள்களை ஒழிக்க ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று வேலூா் மாவட்ட காவல் கணகாணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா். தமிழக துணை முதல்வா் உதயநித... மேலும் பார்க்க

கீழ்பட்டியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

வேலூா்: குடியாத்தம் வட்டம், கீழ்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீ... மேலும் பார்க்க

ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

வேலூா்: ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் மறியல்: 49 போ் கைது

குடியாத்த: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 49- பேரை போலீஸாா் கைது செய்தனா். பிகாா் வாக்காளா் பட்டி... மேலும் பார்க்க