செய்திகள் :

நோ்காணல் தேதி ஒத்திவைப்பு

post image

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் நடைபெறவிருந்த பல்வேறு பணிகளுக்கான நோ்காணல் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கல்லூரி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் சின்னக்கலையம்புத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவில் உள்ள ஆசிரியரல்லா அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கு நோ்காணல் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தவிா்க்க இயலாத நிா்வாகக் காரணங்களால் கீழ்க்காணும் இரு நாள்களுக்கான நோ்காணல் தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. வருகிற 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் மாா்ச் 10-ஆம் தேதிக்கும், வருகிற 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் மாா்ச் 11-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டது.

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!

கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச்... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வ... மேலும் பார்க்க