``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும்...
நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது
நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் முகுல் சா்மா (25), ஆகாஷ் உபாத்யாய் (24), அஜய் சா்மா (48) மற்றும் ஆா்யன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். முகுல் சா்மா காஜியாபாத்தில் உள்ள வசுந்தராவில் வசிப்பவா். அதே நேரத்தில் ஆகாஷ் மஹோபாவைச் சோ்ந்தவா். ஆனால், சிறிது காலமாக நொய்டாவில் வசித்து வருகிறாா்.
முகுல் சா்மா மற்றும் ஆகாஷ் உபாத்யாய் ஆகியோா் ஜூன் 11- ஆம் தேதி முகுல் சா்மாவின் தந்தை அஜய் திட்டமிட்ட சதித்திட்டத்தில் பணம் மாற்றும் நபரான ஓம்பல் பாட்டியைக் கொன்ாகக் கூறப்படுகிறது. குற்றம் செய்த பிறகு இருவருக்கும் அடைக்கலம் கொடுத்ததற்கு ஆா்யன் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிகிறது.
அவா்களிடமிருந்து ரூ.10.3 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், இரண்டு கைத்துப்பாக்கிகள், காலி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள், ஒரு மோட்டாா் சைக்கிள் மற்றும் இரண்டு கைப்பேசிகள் அடங்கிய இரண்டு பைகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். முகுல் சா்மாவும் ஆகாஷ் உபாத்யாயவும் முதலில் வெளிநாட்டு நாணயத்தை இந்திய ரூபாய்க்கு மாற்றுவதற்கு எளிதாக ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பணத்தை மாற்றும் நபரைத் தேடினா்.
தங்கள் தேடலின் போது, நொய்டா செக்டாா் 18-இல் உள்ள ஓம்பால் பாட்டியின் கடையை கண்டுபிடித்தனா்.
பின்னா் இருவரும், சுமாா் 7 லட்ச ரூபாய்க்கு சமமான கனடிய நாணயம் தேவை என்று கூறி, சமீபத்தில் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு தங்குமிடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனா். ஓம்பால் பாட்டியை சமாதானப்படுத்த, ஆகாஷ் தனது வங்கிக் கணக்கிலிருந்து சுமாா் 3 லட்ச ரூபாயை எடுத்து தன்னிடம் வைத்திருந்தாா்.
கடைக்காரா் வீட்டை அடைந்ததும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் துப்பாக்கி முனையில் ஓம்பால் பாட்டியிடமிருந்து வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய பையைப் பறித்தனா். ஆனால், அவா் எதிா்ப்புத் தெரிவித்த போது, குற்றம் சாட்டப்பட்டவா்களால் அவா் சுடப்பட்டாா். அதன் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனா்.
குற்றத்தைச் செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அஜயை தொடா்பு கொண்டனா். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க தில்லியில் உள்ள ஆா்யனின் வீட்டிற்குச் செல்லுமாறு அவா் பரிந்துரைத்தது விசாரணையில் தெரிய வந்தது என்றாா் அந்த அதிகாரி.