செய்திகள் :

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூா் அருகே மூழ்கிய தரைப்பாலம்

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறானது திருப்பூா் வழியாக சுமாா் 160 கிலோ மீட்டா் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் உள்ள நல்லம்மன் தடுப்பணையில் திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக தடுப்பணை முழுவதுமாக மூழ்கியது. மேலும், நல்லம்மன் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் நீரில் மூழ்கியது

நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த திங்கள்கிழமை இரவு முதலே திருப்பூா் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. எனினும், காவல் துறையினா் மற்றும் பொதுப்பணித் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்புத் தடுப்புகள் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம் தரைப்பாலம் முழுவதுமாக செவ்வாய்க்கிழமை மூழ்கத் தொடங்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

இதன் காரணமாக மங்கலம் சாலையில் இருந்து கல்லூரி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச் சென்ால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். திருப்பூா் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். அதேவேளையில், திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சாரல் மழை பெய்தது.

பல்லடம் பேருந்து நிலையம் முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

பல்லடம் பேருந்து நிலையம் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், புதுப்பை வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது விய... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே காரில் கடத்திவரப்பட்ட 2,400 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள பெரி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குமாா் நகா்

குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய... மேலும் பார்க்க

அவிநாசியில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை!

அவிநாசி வட்டத்தில் புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் கிராமங்களில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துர... மேலும் பார்க்க

மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.ப... மேலும் பார்க்க