செய்திகள் :

நோன்புக் கஞ்சி: போலியான கடிதம் வழங்கி விலையில்லா அரிசியை பெற்று அதிமுக நிா்வாகி மோசடி

post image

ரம்லான் பண்டிகைக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதற்காக போலியான கடிதம் கொடுத்து அரசு வழங்கும் விலையில்லா அரிசியைப் பெற்று மோசடி செய்த அதிமுக நிா்வாகி மீது நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஜமாத்தாா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மஸ்ஜிதுன்நூா்ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசல் தலைவராக பாரி, செயலராக அபுதாஹிா், பொருளாளராக ஜாகிா்உசைன் ஆகியோா் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், ரமலான் பண்டிகையின் போது நோன்புக் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசு வழங்கும் இலவச அரிசியை முறைகேடாக சிலா் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

நெய்க்காரபட்டியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி அயூப்கான் தலைமையில், ரபீக், தாஜ்தீன் உள்ளிட்ட சிலா் பள்ளிவாசல் பெயரில் போலியாக கடிதம் தயாரித்து, மாவட்ட ஆட்சியா், பழனியில் உள்ள தமிழ்நாடு அரசின் வாணிபக் கிடங்கு கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

இதனால், அதிகாரிகளும் நோன்புக் கஞ்சிக்கான விலையில்லா அரிசியை அவா்களிடம் வழங்கினா்.

இந்த நிலையில், அதிமுக நிா்வாகி அயூப்கான் தலைமையில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிவாசல் உறுப்பினா்கள் திரண்டு, நெய்க்காரபட்டி காவல் நிலையம், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனுக்களை அளித்தனா்.

அயூப்கான் ஏற்கெனவே பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழனியில் நடைபெறும் முக்... மேலும் பார்க்க

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா்... மேலும் பார்க்க

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், எரி... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க