செய்திகள் :

பங்குச் சந்தையில் ஜிஎஸ்டி எதிரொலி? ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வு!

post image

தொடர்ந்து 2-வது நாளாக பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், பின்னர் சரிவைச் சந்தித்தது.

எனினும் வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 150.30(0.19%) புள்ளிகள் உயர்ந்து 80,718.01 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.25(0.08%) புள்ளிகள் உயர்ந்த நிலையில் 24,734.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் 12 சதவீதம், 28 சதவீதம் வரிகளை நீக்கி 5%, 18% வரி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்று நேற்று(செப். 3) மத்திய அரசு அறிவித்தது.

ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு பங்குச்சந்தையில் இன்று ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நிஃப்டி ஆட்டோ, எஃப்எம்சிஜி(நுகர்வோர் பொருள்கள்), நிதி சேவைகள் உயர்ந்து வர்த்தகமாகின. ஏனெனில் மின்னணு பொருள்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்செக்ஸில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிரென்ட், ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

மாருதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்சிஎல் டெக், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், என்டிபிசி, கோடாக் வங்கி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று குறைந்தன.

stock market ends with slim gains: Sensex settles 150 points higher, Nifty above 24,700

இதையும் படிக்க | ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

புதுதில்லி: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி வெள்ளிக்கிழமையன்று, அனைத்து தவணைக் காலங்களிலும் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.ஆட்ட... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடந்து வெளியேற்றம் மற்றும் இந்தியாவிற்கு அமெரிக்க கூடுதலாக வரிகள் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக, இன்றைய வர்த்தக அமர்வில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்த... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்த நிலையில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் சரிந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முந்தைய முடிவில் இருந்து மாற்ற... மேலும் பார்க்க

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் பைக் அறிமுகம்! ரூ.12.99 லட்சத்தில்..!

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் லைன் - அப் பைக் வரிசைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகள் 8 விதமான மாடல்களில் வெளியாகியுள்ளன. 100 க்கும் மேற்பட்ட அக்ஸசரிஸ்களுடன், 3 விதமான ரிம... மேலும் பார்க்க

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலைய... மேலும் பார்க்க