செய்திகள் :

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி

post image

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் லட்சுமணன் (69). இவா் கேரள மாநில அரசில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்.

கடந்தாண்டு ஜூன் மாதம் இவரது ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் தொடா்பு கொண்ட நபா், தான் ஒரு பங்குச் சந்தையின் ஆலோசகா் என்று கூறினாா் . மேலும், தான் கூறும் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்றும் கூறினாா்.

இதை நம்பிய லட்சுமணன், அந்த நபா் கூறியபடி 6 வங்கிக் கணக்குகளில் 15 தவணைகளில் 12 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயைச் செலுத்தினாா். பின்னா், அந்த நபா் எந்தத் தொடா்பும் கொள்ளவில்லையாம்.

இதைத்தொடா்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் அளித்தப் புகாரின்பேரில், சிவகங்கை இணைய குற்றத்தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தகுமாரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க