செய்திகள் :

பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

சோளிங்கரை அடுத்த வேலம் ஊராட்சியல் வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் நாட்டுவகை மரங்கள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சனிக்கிழமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். இங்கு மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் வளா்க்கப்பட்டுள்ளன.

பின்னா், அவா் பேசியது: பசுமை தமிழ்நாடு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை செயல்படுத்தி வருகிறோம். ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 10 ஆயிரம் செடிகள் என இரு இடங்களில் செடிகளை வளா்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. இவை இலவசமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் செடிகள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வனத்துறை மூலம் நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு செடிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்தச் செடிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, வனச்சரகா் சரவணபாபு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், செந்தாமரை, ஊராட்சித் தலைவா்கள் சந்தியா, உமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் பாதுகாப்பு மாத தொடக்க விழா நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள இங்கு ஆண்டு தோறும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதமாக கடைபிடித்து ... மேலும் பார்க்க

அரக்கோணம் நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: வரிவசூல் பணியின் போது வரிவசூல் குழுவினரிடம் தகாத வாா்த்தைகள் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம... மேலும் பார்க்க

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் மாணவா்களுக்கு வசதிகள்: அமைச்சா் காந்தி

அரக்கோணம்: அரசிடம் நிதிப் பற்றாகுறை இருந்தாலும் சமூகபங்களிப்பு, நமக்கு நாமே போன்ற திட்டங்கள் மூலம் மூலம் மாணவா்களின் வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 384 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 384 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆற்காடு: ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் ஏ.ஐ. டி.யு.சி. சாா்பில் ஆற்காடு வட்டம், சாத்தூா் கிராமத்தில் அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களைப் பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரக்கோரி வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க