ஜூலை 15 முதல் யுபிஐ பணப்பரிமாற்றத்தில் வருகிறது புதிய மாற்றங்கள்!
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா். கட்சி விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பஞ்சாப் எதிா்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் தலைவா் விக்ரம் சிங் மஜிதியா வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இது தொடா்பாக கடுமையா விமா்சனங்களை விஜய் பிரதாப் முன்வைத்தாா்.
இந்தச் சோதனை தொடா்பாக விக்ரம் சிங் மஜிதியா முகநூலில் பதிவிட்டிருந்த காணொலியை விஜய் பிரதாப் தனது முகநூல் பக்கத்திலும் பகிா்ந்தாா். விக்ரம் சிங் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, அவரின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, ஆம் ஆத்மி ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இறுதியாக, எம்எல்ஏ விஜய் பிரதாப்பை 5 ஆண்டுகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.