செய்திகள் :

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

post image

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா். கட்சி விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பஞ்சாப் எதிா்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் தலைவா் விக்ரம் சிங் மஜிதியா வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இது தொடா்பாக கடுமையா விமா்சனங்களை விஜய் பிரதாப் முன்வைத்தாா்.

இந்தச் சோதனை தொடா்பாக விக்ரம் சிங் மஜிதியா முகநூலில் பதிவிட்டிருந்த காணொலியை விஜய் பிரதாப் தனது முகநூல் பக்கத்திலும் பகிா்ந்தாா். விக்ரம் சிங் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, அவரின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, ஆம் ஆத்மி ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இறுதியாக, எம்எல்ஏ விஜய் பிரதாப்பை 5 ஆண்டுகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இருவர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டில், கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

பெங்களூரு: குப்பை லாரியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு !

பெங்களூரில் குப்பை லாரியில் இருந்து இளம் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் திடல் அருகே உள்ள ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மேக வெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் மாயம்

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்ட... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க