செய்திகள் :

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!

post image

மாதோபூர் (பஞ்சாப்): பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் தலைமையகம் அருகே மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்கள், பொதுமக்கள் 3 பேரை புதன்கிழமை காலை 6 மணிக்கு இந்திய ராணுவ விமானப் படை மீட்ட அடுத்த சில நிமிடங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் அலுவலக கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

புதன்கிழமை காலை 6 மணிக்கு மோசமான வானிலை நிலவியபோதிலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இந்திய ராணுவ விமானப்படை, மாதோபூரில் உள்ள பழைய அடுக்குமாடி கட்டடத்தின் மேல் ஹெலிகாப்டரை சாதுர்யமாக இறக்கி வெள்ளத்தில் சிக்கித் தவித்த அனைவரையும் வெற்றிகரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை விமானப்படை வீரர்கள் மீட்ட அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டடம் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தில் விமானப்படையினர் துணிச்சலாக சரியான நேரத்தில் பல உயிர்களை காப்பறிய விமானப்படை வீரர்களின் செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நெருக்கடி சூழ்நிலைகளில் தங்களது மிக சாதுர்யமான வெற்றிகரமான நடவடிக்கைகளால் உயிர்களைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், திறனும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய ராணுவத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மீட்பு நடவடிக்கையும், அவசரநிலைகளுக்கு விரைவான மற்றும் திறமையான நடவடிக்கைக்கான முன்னுதாரனத்தை உறுதி செய்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், உஜ் மற்றும் ரவி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் பஞ்சாப் மாவட்டங்களான பதான்கோட், ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், கபுர்தலா, ஃபாசில்கா, டார்ன் தரன் மற்றும் ஃபிரோஸ்பூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர் மட்டங்கள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் அதிகாரிகளுடன் மாவட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஜம்மு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை காலை எச்சரிக்கை விடுத்தது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, ஜம்மு, ஆர்எஸ் புரா, சம்பா, அக்னூர், நக்ரோட்டா, கோட் பல்வால், பிஷ்னா, விஜய்பூர், பர்மண்டல் மற்றும் கதுவா மற்றும் உதம்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான வெப்பச்சலனம் காரணமாக ரியாசி, ராம்பன், தோடா, பில்லாவர், கத்ரா, ராம்நகர், ஹிராநகர், கூல், பனிஹால் மற்றும் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களின் அருகிலுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

The Indian Army Aviation on Wednesday conducted a daring rescue operation near Madhopur Headworks in Punjab's Pathankot district, saving 22 CRPF personnel and three civilians who were stranded due to rising floodwaters.

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றும் நான் அதிமுகவுக்குதான் வாக்கு கேட்பேன் என சேலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உற... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

டேராடூன் (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வ... மேலும் பார்க்க

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விநாயகர் கோயில்களில் திரளமான பக்தர்கள் தரிசனம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன. தமிழகம்... மேலும் பார்க்க

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக... மேலும் பார்க்க

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் உள்பட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தையே உலுக்கிய ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித்,... மேலும் பார்க்க