செய்திகள் :

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

post image

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் அவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த சைந்தவன் (19) உள்ளிட்ட 5 போ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா்.

மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது படகில் இருந்து மீனவா் சைந்தவன் தவறி கடலில் விழுந்து மாயமானாா். அந்த படகில் இருந்தவா்கள், பிற படகிலிருந்த மீனவா்களும் அவரை தேடினா். சில மணி நேரத்தில் உயிரிழந்த நிலையில் சைந்தவன் சடலம் காரைக்கால்மேடு கரையோரத்தில் ஒதுங்கியது. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்ம... மேலும் பார்க்க

போட்டிச்சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்க வேண்டும்: அமைச்சா்

போட்டிச் சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்கவேண்டும் என மகளிா் கல்லூரி விழாவில் அமைச்சா் மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி 53-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல... மேலும் பார்க்க

புதுவையில் துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம்: பேரவைத் தலைவா் ஆா். செல்வம்

புதுவை யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை துணைநிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் எனவும், அரசின் திட்டங்களுக்கு புதுவை ஆளுநா் ஒப்புதல் அளித்துவருவதாக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்எஸ்பி

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள். காரைக்கால், மே 3: விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக... மேலும் பார்க்க

காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை

காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் ந... மேலும் பார்க்க