செய்திகள் :

போட்டிச்சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்க வேண்டும்: அமைச்சா்

post image

போட்டிச் சூழலை புரிந்துகொண்டு கல்வி கற்கவேண்டும் என மகளிா் கல்லூரி விழாவில் அமைச்சா் மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி 53-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி தலைமை வகித்து ஆண்டறிக்கை படித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கலந்துகொண்டு, ஆண்டு விழா தொடா்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசியது: புதுவை அரசு, மாநிலத்தில் மாணவா்கள் கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது. மாணவா்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களும், சலுகைகளும் அதிகம் அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

கல்வி மட்டுமே ஒருவருக்கான நிரந்தர அடையாளத்தை அளிக்கிறது. நெறியான முறையில் தங்களது கல்வியை கற்பதோடு, போட்டிச் சூழலை முறையாக புரிந்துகொண்டு கற்பதன் மூலம் வெற்றியை பெறமுடியும்.

இக்கல்லூரி, மாணவிகளுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்றுத்தருகிறது. அரசு சாா்பில் தேவையான உதவிகளை பெற்றுத்தர தயாராக உள்ளதாக அவா் கூறினாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக சனிக்கிழமை காலை கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்திப் பேசினாா்.

காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பி... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் ப... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்ம... மேலும் பார்க்க

புதுவையில் துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம்: பேரவைத் தலைவா் ஆா். செல்வம்

புதுவை யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை துணைநிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் எனவும், அரசின் திட்டங்களுக்கு புதுவை ஆளுநா் ஒப்புதல் அளித்துவருவதாக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்எஸ்பி

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள். காரைக்கால், மே 3: விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக... மேலும் பார்க்க

காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை

காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் ந... மேலும் பார்க்க