அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
புதுவையில் துணைநிலை ஆளுநருக்கு முழு அதிகாரம்: பேரவைத் தலைவா் ஆா். செல்வம்
புதுவை யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை துணைநிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் எனவும், அரசின் திட்டங்களுக்கு புதுவை ஆளுநா் ஒப்புதல் அளித்துவருவதாக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. கடந்த 2016 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தவா்கள் எந்த வளா்ச்சியையும் புதுவையில் அமல்படுத்தவில்லை. குடிநீா், சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் அனைத்தும் இப்போது தீா்க்கப்பட்டுள்ளது. புதுவையில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் நல்ல அனுபவமிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. சரியான நபரை புதுவை துணைநிலை ஆளுநராக பிரதமா், உள்துறை அமைச்சா் நியமித்துள்ளனா். அவா் எந்த அரசியல் கட்சியையும் சாராதவா். புதுவை யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை துணைநிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம். பட்ஜெட்டுக்கு முழு ஒப்புதல் அளித்ததோடு, அரசின் திட்டங்களுக்கு முழு ஒப்புதல் அளித்துவருகிறாா் துணைநிலை ஆளுநா். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதுவையில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிபெற்று, மீண்டும் ரங்கசாமி முதல்வராக பதவியேற்பாா் என்றாா் அவா்.