செய்திகள் :

படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நடிகை! விடியோ வைரல்!

post image

விஜய் தொலைக்காட்சியின் பொன்னி தொடரில் நடித்துவரும் நாயகி வைஷ்ணவி விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த சில நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் இடம்பெறாத நிலையில், அவர் விபத்திற்குப் பிறகு சிகிச்சைப் பெற்றுவரும் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு தடைகளைத் தாண்டி பயணிப்பதற்கு சினிமாவின் மீதான அர்ப்பணிப்பும் இலக்கும்தான் காரணம் எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த்தை நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் தொடரில் கவனம் செலுத்தி வந்தார் வைஷ்ணவி. இதனிடையே கடந்த சில நாள்களாக வைஷ்ணவி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பப்படாமல் கதைக்களம் நகர்ந்துகொண்டிருந்தது.

பொன்னி தொடரில் இருந்து வைஷ்ணவி விலகிவிட்டாரா? என்ற கேள்விகளும் சமூக வலைதளப் பக்கங்களில் எழுந்தன.

இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்தால் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் விடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய வைஷ்ணவி

அந்த விடியோவில், தனது கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். முழுவதுமான குணமடையாக நிலையில், கையில் குச்சியுடன் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்றுள்ளார்.

சமீப நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் அவரின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி வருகின்றனர்.

பொன்னி தொடரின் படப்பிடிப்பில்..

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி,

''இந்தத் துறையில் (சினிமா) சவால்கள் உங்களை அழுத்தியெடுக்கும். அங்கீகாரத்துக்காக மட்டும் நான் இந்தத் துறையில் இல்லை, என்னுள் இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டுவரும் சந்தர்ப்பமாகவே ஒவ்வொரு நாளையும் பார்க்கிறேன். திரையில் தெரியும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் திரைக்கு பின்னால் பலமணி நேர முன்னேற்பாடுகளும், அர்ப்பணிப்புகளும் இருக்கும். ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு தொடரும் ஒரு பெரும் பயணத்தின் பலனாகவே இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!

உலக குத்துச்சண்டை: 10 பேருடன் இந்திய அணி

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 10 போ் கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.முதல் முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவினரும... மேலும் பார்க்க

தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றச்சாட்டு!

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பமாக தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் வீராங்கனை குற்றம் சாட்டி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அர்ஜுனா விருது வென்றவரான முன்னாள்... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசில், வடிவேலுவின் மாரீசன் வெளியீடு அப்டேட்!

மாரீசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர்.மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு... மேலும் பார்க்க

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜ... மேலும் பார்க்க

நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப... மேலும் பார்க்க