பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மாா்ச் 6-இல் பேரணி
தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மாா்ச் 6-இல் கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சிஐடியு, ஏஐடியுசி, பணியாளா் சம்மேளனம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ஊதிய பேச்சுவாா்த்தைத் தொடா்பான அறிவிப்பு இல்லாத நிலையில், அடுத்த மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. போக்குவரத்து ஊழியா்களின் பணப் பலன்கள், ஓய்வூதியா்களின் அகவிலைப்படி உயா்வு உள்ளிட்டவை மறுக்கப்படுவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி வழங்காததுதான் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், கடந்த 2022-இல் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரசிடம் நிதி பெறுவதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீா்வாக உள்ளது.
எனவே, தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தி மாா்ச் 6-இல் பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தரிவிக்கப்பட்டுள்ளது.