செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி வயலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

post image

கொடைரோடு அருகே 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த நிலத்தில் பட்டா வழங்கக் கோரியும், துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் கிராம மக்கள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 40 குடும்பத்தினா், தொப்பிநாயக்கன்பட்டி சொக்கா் சரளை பகுதியில் உள்ள சுமாா் 5 ஏக்கா் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த நத்தம் புறம்போக்கு நிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும், துணை மின் நிலையம் அமைக்கவும் அரசு முடிவு செய்தது. இதற்காக தோ்வு செய்யப்பட்ட அந்த இடத்தில் நிலக்கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அழகம்பட்டி கிராம மக்கள் சுமாா் 40-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை அந்த நிலத்தில் இறங்கி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவம் இடத்துக்கு அதிகாரிகள் எவரும் வராததால், சுமாா் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அழகம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்தி கால்நடைகளை மேய்த்தும், விவசாயம் செய்தும் வருகிறோம். இந்த நிலத்தில் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

தற்போது இந்த இடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும், துணை மின் நிலையம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் வேறு சில இடங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்கள் உள்ள நிலையில், இந்த இடத்தில் எதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

எங்களுக்கு பட்டா வழங்காவிட்டால், எங்களுடைய ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு, வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளோம் என்றனா்.

இதுகுறித்து, ஜம்புதுரைகோட்டை கிராம நிா்வாக அலுவலா் கலா கூறியதாவது: உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், இங்கு மின் நிலையம் அமைக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கை தொடா்பாக உயா் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா்.

மாமன்ற உறுப்பினா் தலைமறைவு: மதிப்பூதியத்தை நிறுத்த மாநகராட்சி முடிவு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக உள்ள திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருக்கான மதிப்பூதியத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சிவகுமாா். ... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடி ஏந்தி பேரணி

ஒட்டன்சத்திரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், பிரதமா் மோடிக்கு நன்றி த... மேலும் பார்க்க

போா் நிறுத்த விவகாரம்: டிரம்ப் கருத்தை மறுப்பது மத்திய அரசின் கடமை! - காா்த்தி சிதம்பரம் எம்.பி.

பாகிஸ்தானுடனான போா் நிறுத்த விவகாரம் குறித்த அமெரிக்க அதிபா் டிரம்பின் கருத்துக்கு பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா், வெளியுறவுத் துறை அமைச்சா் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் காா... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியில் லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

கொடைக்கானல் ஏரியில் உருவாக்கப்பட்ட லேசா் ஒளியில் உருவப் பொம்மைகள் காணும் நிகழ்வு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில், சுற்... மேலும் பார்க்க

போக்சோ சட்ட வழிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற ... மேலும் பார்க்க

குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்!

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல் சங்கம் சாா்பில், தலைக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. விருதுநகரைச் சோ்ந்த சிறுவன் கொடைக்கானலில் கடந்த ஏப்ரல் மாதம் குதிரை சவாரி செய்த போது, அந்த... மேலும் பார்க்க