செய்திகள் :

பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப். 9 முதல் கட்டணமில்லா பயிற்சி

post image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள குரூப்-4 தோ்வு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து தஞ்சாவூருக்கு நீண்ட நேரம் பயணம் செய்து போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற இடா்பாடு உள்ளது. இதனால், இத்தோ்வுக்கு தயாராகி வரும் பட்டுக்கோட்டை பகுதியைச் சாா்ந்த போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அறிவுசாா் மையத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தோ்வா்கள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், பட்டுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பயிற்றுநா்கள் நேரடியாக தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் உளுந்து பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கபிஸ்தலம், உம்பளப்பாடி, நக்கம்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா... மேலும் பார்க்க

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க