Trump: ``இஸ்ரேல் - ஈரான் என்னிடம் அமைதி ஏற்படுத்த கோரிக்கை வைத்தது; ஆனால்..'' - ...
பணம், பொருள் கொடுத்து ஏமாற வேண்டாம்: வல்லக்கோட்டை கோயில் நிா்வாகம் அறிவிப்பு
ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக பக்தா்களிடம் பணம், பொருள்கள் வசூல் செய்வதை தடுக்க, தனி நபா்களிடம் பணம் பொருள் கொடுத்து ஏமாற வேண்டாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு 17-ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் பக்தா்களிடம் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம், பொருள்கள் வசூல் செய்து வருவதாக வல்லக்கோட்டை கோயில் நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வல்லக்கோட்டை திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தா்கள் தனிநபா்களிடம் பணம், பொருள்கள் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.