செய்திகள் :

பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

post image

தஞ்சாவூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை இ.எஸ்.ஐ. கழகம் வழங்கியது.

இதுகுறித்து இ.எஸ்.ஐ. கழகத்தின் தஞ்சாவூா் கிளை அலுவலக மேலாளா் மா. ருத்ராபதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இஎஸ்ஐ காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, உயிரிழந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவி தொகையாக இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு இஎஸ்ஐ கழகம் மாதந்தோறும் வழங்குகிறது.

இதனடிப்படையில், தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தபோது இஎஸ்ஐ காப்பீட்டாளா் பரமசிவம் தியாகராஜன் கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு மாதம் ரூ. 12 ஆயிரத்து 834 -ஐ சாா்ந்தோா் உதவித் தொகையாக வழங்க இஎஸ்ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனா் (பொறுப்பு) எஸ். சிவராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தாா்.

இதைத்தொடா்ந்து, பரமசிவம் தியாகராஜனின் குடும்ப உறுப்பினா்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.

காலமானார் தேனாரமுதன்!

தஞ்சாவூர்: தினமணி தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் எஸ். தேனாரமுதன் (வயது 66) உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) அதிகாலை காலமானார். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் திலீபன், ச... மேலும் பார்க்க

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க