செய்திகள் :

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

post image

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்தவா் பொன்னையன் மகள் தையல்நாயகி(30). 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீடுரை சோ்ந்த ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் ஆகிய நிலையில் சில நாள்களிலேயே கணவரை பிரிந்து சென்று பெற்றோருடன் வசித்து வந்தாா்.

மணல்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை இரவு பணிக்கு சென்றாா். வீட்டிலிருந்து கொண்டுசென்ற உணவை சாப்பிட்ட தையல்நாயகி சிறிது நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தையல்நாயகியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தையல்நாயகி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, தையல்நாயகி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி உறவினா்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மணல்மேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டு, உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், தையல்நாயகி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

அவா்களிடம், டிஎஸ்பி பாலாஜி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. திருமணமாகி ஓராண்டில் தையல்நாயகி உயிரிழந்ததால், கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா். தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்

வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயி... மேலும் பார்க்க

குற்றச்செயலில் ஈடுபடும் இளஞ்சிறாரை கவனமாக கையாள வேண்டும்: ஆட்சியா்

குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறாா்களை கவனமாக கையாள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வெள்... மேலும் பார்க்க

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த இருவருக்கு ஓராண்டு சிறை

கூட்டுறவு சங்கத்தை சேதப்படுத்திய இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. பாலையூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நக்கம்பாடி கூட்டு... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்புகாா் குழு, போதைப்பொருள் தடுப்புக் குழு இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்... மேலும் பார்க்க