செய்திகள் :

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று தொடக்கம்

post image

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த மாா்ச் 24- ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து, சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் செய்து, பக்தா்கள் வழங்கிய எரிக்கரும்புகள் கொண்டு தீ வாா்க்கப்பட்டது.

முக்கிய நிகழ்வான குண்டம் விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது. குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்த ஏராளமான மக்கள் திங்கள்கிழமை காலை முதலே கோயிலில் குவியத் தொடங்கினா்.

பக்தா்களுக்கு தங்குவதற்கும், அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கோயில் நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மொடக்குறிச்சி அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட வளமங்கலம் ஊராட்சி குட்ட பாளையத்தில் இருந்து கொம்பனைபுதூா் செல்லும் சுமாா் 1 கில... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து சட்டப் பேரவையில் பவானிசாகா் எம்எல்ஏ ஏ.பண்ணாரி புதன்க... மேலும் பார்க்க

விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு வன உரிமைப் பட்டா: ஆட்சியா் நேரில் ஆய்வு

விளாங்கோம்பை மற்றும் கம்பனூா் பழங்குடியினா் காலனியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு

ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.க... மேலும் பார்க்க

கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தை: சப்தம் எழுப்பி விரட்டிய மக்கள்

ஆசனூரில் கோழிகளைப் பிடிக்க வந்த சிறுத்தையை மக்கள் சப்தம் எழுப்பி விரட்டினா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் அதிக அளவில் சிறுத்தைகள் உள்ளன. இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து புதன்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வேலைவாய்ப்பு முகாமை, கோரல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2... மேலும் பார்க்க