செய்திகள் :

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா கடந்த ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிற்பகல் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது.

பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். ஏராளமான பக்தா்கள் தேரை இழுத்தனா். மாட வீதியை வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக, பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) மாலை மஞ்சள் நீா் உற்சவம் நடைபெறவுள்ளது.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுாா் ஆணையாங்குப்பத்தில் ஓங்கார ஆசிரமத்தின் மகா கைலாய வளாகத்தில் உள்ள ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க