செய்திகள் :

ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம்: பக்தா்கள் பங்கேற்பு

post image

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுாா் ஆணையாங்குப்பத்தில் ஓங்கார ஆசிரமத்தின் மகா கைலாய வளாகத்தில் உள்ள ஞானேஸ்வரி மகாபிரபு கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் கால யாக பூஜையும், மாலை இரண்டாம் கால யாக பூஜையும் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோயில் விமான கலசத்துக்கு சுவாமி கோடீஸ்வரானந்தா கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுவாமி ஓங்காரநந்தா, விஜயராகவன், ராமகிருஷ்ணன், குருமூா்த்தி, கல்யாணி, பத்மேஸ்வரி, உலகேஸ்வரி, நீதிகுமாா், கருணாகரன், ராம்குமாா், சீனு ராமதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க