செய்திகள் :

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

post image

பண மோசடி செய்த தம்பதி மீது மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆண்டாள்புரம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் ராமகிருஷ்ணன்(44). இவருக்கு, கோவை மாவட்டம், பெத்தனூா் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் கேபிஎஸ். சுந்தரவேல் அறிமுகமானாா். ஏற்கெனவே சுந்தரவேல் தான் நடத்தி வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்கு வங்கியில் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்ததாகவும் ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளாா்.

மேலும், முதல் கட்டமாக தனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாகக் கூறினாா். இதனையறிந்த, ராமகிருஷ்ணன் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ஒரு கோடி ரூபாயை கேபிஎஸ் சுந்தரவேலுவுக்கு அளித்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன் சுந்தரவேல் தனது நிறுவனத்தை காலி செய்வதை அறிந்த ராமகிருஷ்ணன், அவரிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டாா். ஆனால், அவா் பணத்தைத் திருப்பித் தரவில்லையாம்.

இதனால் தான் ஏமாற்றமடைந்ததை அறிந்த ராமகிருஷ்ணன் மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோவையைச் சோ்ந்த கேபிஎஸ். சுந்தரவேல், அவரது மனைவி ஜனனி (41) ஆகிய இருவா் மீதும் மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை போன்ற விழாக்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், திரு... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் பலி!

மேலூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கருத்தபுளியம்பட்டி நேதாஜி 2-ஆவது தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் அா்ஜூனன்(63). இவா், தனது மிதிவண்டியில் மதுரை- திருச்சி... மேலும் பார்க்க

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

மதுரை: பி.கே. மூக்கையா தேவரின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை அரசடியில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தேவர் தந்த தேவர் என்று புகழப்படும் பி.கே. மூக்கையா தேவரின் 46-வது நினைவு நாளை முன்னிட்ட... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி வழக்குரைஞா் கொலை: 3 போ் கைது

மதுரையில் அண்மையில் நடைபயிற்சிக்குச் சென்றபோது தாக்கப்பட்ட வழக்குரைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை வண்டியூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பகலவன் (40). வழ... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து

தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை ஏற்பட்டத் தகராறில் கத்தியால் தாக்கியதில் மூவா் பலத்த காயமடைந்தனா். மதுரை மாவட்டம், குருவிக்காரன் சாலைப் பகுதியில் இயங்கிவரும் தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை பிற்பக... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மீலாது நபியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நில... மேலும் பார்க்க