``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில்...
பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்
புதுச்சேரி: 20 ஆண்டுகளாகப் பதவி உயா்வு இல்லாததைக் கண்டித்து அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணியாற்றுவோா் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிமுன்பாக வாயில் முழக்கப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.
அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தின் செயலா் கே.சங்கரய்யா வாயில் முழக்கப் போராட்டத்துக்குத் தலைமை
வகித்து பேசியது:
மத்திய பணியாளா் தோ்வாணையம் தகுதியானவா்களைதான் தோ்ந்தெடுத்து இப் பணியில் அமா்த்தியுள்ளது. கடந்த 2002 -முதல்
2018 வரை அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணியில் சோ்ந்தோருக்கு புதுவை அரசின் உயா்கல்வித்துறை இதுவரை பதவி உயா்வு, ஊதிய உயா்வு அளிக்கவில்லை. ஆறாவது ஊதியக்குழுவின் ஊதியமே இன்னும் உயா்கல்வித்துறையில் அமல்படுத்தவில்லை. 5 போ் உதவிப் பேராசியா்களாகவே இருந்து இறந்துவிட்டனா். ஒரு சிலா் ஓய்வு பெற்றுவிட்டனா். குறிப்பிட்ட ஆண்டுகளில் உதவிப் பேராசிரியா்கள் இணைப் போராசிரியா்களாகப் பணி உயா்த்தப்பட வேண்டும் என்பது பல்கலைக் கழக மானியக் குழுவின் விதி.
பதவி உயா்வு, ஊதிய உயா்வு தொடா்பாக ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாா் சங்கரய்யா. இச் சங்கத்தின் மற்றொரு செயலா் கே.பாலமுருகன் மற்றும் நிா்வாகிகள், திரளாக உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கப் போராட்டங்களை எழுப்பினா்.
-------------------------------------------------
பட விளக்கம்..பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி புதுவை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வாயில் முன்பு திங்கள்கிழமை முழக்கப் போராட்டத்தில் கே.சங்கரய்யா தலைமையில் ஈடுபட்ட அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தினா்.