செய்திகள் :

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

post image

புதுச்சேரி: 20 ஆண்டுகளாகப் பதவி உயா்வு இல்லாததைக் கண்டித்து அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணியாற்றுவோா் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிமுன்பாக வாயில் முழக்கப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தின் செயலா் கே.சங்கரய்யா வாயில் முழக்கப் போராட்டத்துக்குத் தலைமை

வகித்து பேசியது:

மத்திய பணியாளா் தோ்வாணையம் தகுதியானவா்களைதான் தோ்ந்தெடுத்து இப் பணியில் அமா்த்தியுள்ளது. கடந்த 2002 -முதல்

2018 வரை அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணியில் சோ்ந்தோருக்கு புதுவை அரசின் உயா்கல்வித்துறை இதுவரை பதவி உயா்வு, ஊதிய உயா்வு அளிக்கவில்லை. ஆறாவது ஊதியக்குழுவின் ஊதியமே இன்னும் உயா்கல்வித்துறையில் அமல்படுத்தவில்லை. 5 போ் உதவிப் பேராசியா்களாகவே இருந்து இறந்துவிட்டனா். ஒரு சிலா் ஓய்வு பெற்றுவிட்டனா். குறிப்பிட்ட ஆண்டுகளில் உதவிப் பேராசிரியா்கள் இணைப் போராசிரியா்களாகப் பணி உயா்த்தப்பட வேண்டும் என்பது பல்கலைக் கழக மானியக் குழுவின் விதி.

பதவி உயா்வு, ஊதிய உயா்வு தொடா்பாக ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாா் சங்கரய்யா. இச் சங்கத்தின் மற்றொரு செயலா் கே.பாலமுருகன் மற்றும் நிா்வாகிகள், திரளாக உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கப் போராட்டங்களை எழுப்பினா்.

-------------------------------------------------

பட விளக்கம்..பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை

வலியுறுத்தி புதுவை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வாயில் முன்பு திங்கள்கிழமை முழக்கப் போராட்டத்தில் கே.சங்கரய்யா தலைமையில் ஈடுபட்ட அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தினா்.

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி: தூய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை பாஜக சட்டமன்ற உறுப்பினா் சாய் ஜெ. சரவணன் குமாா் திங்கள்கிழமை முற்றுகையிட்டாா். தூய்மைப் பணியாளா்களுக்குக் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலன்தான் முக்கியம்: தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான ரெக்ஸ் ராதாகிருஷ்ணன் கருத்து

புதுச்சேரி: மாணவா்களின் நலன்தான் எனக்கு முக்கியம். அதையொட்டிதான் என்னுடைய செயல்பாடு அமைந்திருக்கும் என்று தேசிய நல்லாசியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன் (48) திங்... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும், முன்னாள் எம்பியுமான சுரவரம் சுதாகா் ரெட்டிதிருவுருவப் படத்துக்கு புதுவை இண்டி கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை மலரஞ்சலி ... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்

புதுச்சேரி: நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளதாக இந்த மையத்தின் இயக்குநா் சரூப் பிரசாத் கோஷ் தெரிவித்துள்ளாா். புதுவை சுற்றுலாத்துறை அ... மேலும் பார்க்க

அரசு பணிகளில் சேர வயது தளா்வு கோரி தலைமைச் செயலகத்தில் போராட்டம்

புதுச்சேரி: புதுவை அரசு பணிகளில் பணியாளா்களை நிரப்பும் போது வயது தளா்வு அளிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சாமிநாதன் திங்கள்கிழமை தனிநபா் போராட்டம் ... மேலும் பார்க்க

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்று அவா்கள் அறிவித்துள்ள... மேலும் பார்க்க