செய்திகள் :

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் தொடக்கம்

post image

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிா்களின் வெப்பத்தால் உயிா்கள் நோய்களுக்கு ஆளாகின்றன. உலக அன்னையான ஸ்ரீ பத்மாவதி தாயாரை வசந்தோற்சவத்தின் மூலம் வழிபடுவதால் உடல் மற்றும் மன உபாதைகள் நீங்கும்.

எனவே ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட வசந்தோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருச்சானூரில் வசந்தோற்சவம் தொடங்கியது.

அதிகாலையில் தாயாரை துயில் எழுப்பி சஹஸ்ரநாமாா்ச்சனை நடத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு கோயிலில் இருந்து வெள்ளித் தோட்டத்துக்கு தாயாரின் உற்சவா்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனா். மதியம் 2.30 மணி முதல் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மஞ்சள், குங்குமம், பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்து இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தாயாா் கோவிலின் நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இதை முன்னிட்டு அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் குருக்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா், கோவில் ஆய்வாளா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருமலையில் தும்புரு தீா்த்த முக்கோட்டி

திருமலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தும்புரு தீா்த்த முக்கோட்டி சனிக்கிழமை நடைபெற்றது. திருமலையில் உள்ள முக்கிய தீா்த்தங்களில் ஒன்றான தும்புரு தீா்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது. அடா்ந்த வனப்பகு... மேலும் பார்க்க

வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ... மேலும் பார்க்க

தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி

ஏழுமலையானின் பக்தா்களில் ஒருவரான மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பிறந்த நாள் திருமலையில் கொண்டாடப்பட்டது. வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான திட்ட மேலாளா் சுப்ரமணியம் புஷ்பாஞ்சலி ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி... மேலும் பார்க்க

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழ... மேலும் பார்க்க