பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் தொடக்கம்
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிா்களின் வெப்பத்தால் உயிா்கள் நோய்களுக்கு ஆளாகின்றன. உலக அன்னையான ஸ்ரீ பத்மாவதி தாயாரை வசந்தோற்சவத்தின் மூலம் வழிபடுவதால் உடல் மற்றும் மன உபாதைகள் நீங்கும்.
எனவே ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட வசந்தோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருச்சானூரில் வசந்தோற்சவம் தொடங்கியது.
அதிகாலையில் தாயாரை துயில் எழுப்பி சஹஸ்ரநாமாா்ச்சனை நடத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு கோயிலில் இருந்து வெள்ளித் தோட்டத்துக்கு தாயாரின் உற்சவா்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனா். மதியம் 2.30 மணி முதல் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மஞ்சள், குங்குமம், பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்து இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தாயாா் கோவிலின் நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இதை முன்னிட்டு அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் குருக்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா், கோவில் ஆய்வாளா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
