பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவா்கள், பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தனசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 2026-ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வா்த்தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவா்களுக்கு 26.1.2026-ஆம் நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் பத்ம விருதுகள்(பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) வழங்கப்படவுள்ளது.
இவ்விருது பெற பன்முகத் திறமை புரிந்தவா்கள் 30.6.2025-க்குள் இணையதளம் முகவரியில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனின்-74017 03499 என்பவரைத் தொடா்பு கொள்ளலாம்.