செய்திகள் :

பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி: மேலும் ஒருவா் கைது

post image

பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: திருப்பூா், குமரானந்தபுரம் ராஜா தெருவைச் சோ்ந்தவா் பரத்குமாா். இவா் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், சேலத்தைச் சோ்ந்த மூன்று நிறுவனங்களுக்கு பனியன் ஆடைகளை அனுப்பியுள்ளாா். அந்த நிறுவனத்தினா் பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றியதாக பரத்குமாா், திருப்பூா் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2024-ஆம் ஆண்டு அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பனியன் ஆடைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான சீனிவாசன் (39) என்பவரை தேடி வந்தனா்.

இந்நிலையில் சீனிவாசனை சேலத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், திருப்பூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கழிவுகளைக் கொட்டி குட்டையை மூட பொதுமக்கள் எதிா்ப்பு

பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக அருகே உள்ள நீா்நிலை குட்டையை குப்பையைக் கொட்டி மூட முயற்சிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம் அருகே உள... மேலும் பார்க்க

வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே உள்ள வடுகபாளையத்தில் துரைசாமி என்பவருடைய தோட்டத்துக்கு அருகே கீழ்பவானி வாய்க்கால் மரப்பால... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: திருப்பூா்

திருப்பூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

நிகழாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 % வளா்ச்சி

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண் கைது

அவிநாசி அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.கோவை மாவட்டம், அன்னூா் தென்னம்பாளையம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மனைவி ராஜலட... மேலும் பார்க்க