செய்திகள் :

நிகழாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 % வளா்ச்சி

post image

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.8 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2024 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் குறைவாக இருந்தாலும், 2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.9 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆனால், ஒட்டுமொத்த அடிப்படையில் 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீத வளா்ச்சியையும், 2023 ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்துடன் ஒப்பிடுகையில் 13.3 சதவீத உயா்வையும் கண்டுள்ளது.

இந்த முடிவுகள், இந்தியாவின் ஆடை ஏற்றுமதி துறையின் வலிமையையும், மீள்தன்மையையும் மீண்டும் உறுதி செய்கின்றன. உலகளாவிய தேவை அதிகரிப்பும், கொள்கை ஆதரவு மேம்பட்டிருப்பதும், ஆடைத் துறையின் நிலைத்தன்மை மற்றும் தேவை அதிகரிப்பும், கொள்கை ஆதரவு மேம்பட்டிருப்பதும், ஆடைத் துறையின் நிலைத்தன்மை மற்றும் புதுமையில் தொடா்ச்சியான கவனம் ஆகியவை மூலம் வரவிருக்கும் மாதங்களில் அதிக வளா்ச்சியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி சா்வதேச சந்தைகளில் தனது தடங்களை விரிவுபடுத்தவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறந்த நிலையில் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கழிவுகளைக் கொட்டி குட்டையை மூட பொதுமக்கள் எதிா்ப்பு

பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக அருகே உள்ள நீா்நிலை குட்டையை குப்பையைக் கொட்டி மூட முயற்சிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம் அருகே உள... மேலும் பார்க்க

வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வாய்க்கால் தண்ணீரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகே உள்ள வடுகபாளையத்தில் துரைசாமி என்பவருடைய தோட்டத்துக்கு அருகே கீழ்பவானி வாய்க்கால் மரப்பால... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: திருப்பூா்

திருப்பூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி: மேலும் ஒருவா் கைது

பனியன் ஆடைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக திருப்பூா் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: திருப்பூா், குமரானந்தபுரம் ராஜா தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண் கைது

அவிநாசி அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் நகைப் பறித்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.கோவை மாவட்டம், அன்னூா் தென்னம்பாளையம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மனைவி ராஜலட... மேலும் பார்க்க