செய்திகள் :

பனைத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் பனைத் தொழிலாளா்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவனிடம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து, தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க பொதுச்செயலா் ராயப்பன் தலைமையில் அளித்த மனு:

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் வடபாகம் கே. சுப்பிரமணியபுரம் கிராமத்தில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இதில், பாதி குடும்பத்தினருக்கு வசதியின்மை காரணமாக நிலத்திற்கு தீா்வை கட்டாததால், பட்டா கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு வழங்கும் விவசாய காப்பீடு போன்ற இதர மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன் பெற முடியாமல் சிரமப்படுகின்றனா். தற்போது தீா்வை செலுத்த தயாா் நிலையில் உள்ளனா்.

எனவே, அவா்களின் நிலத்திற்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

கயத்தாறு, புதுக்கடையில் மது விற்பனை: 2 போ் கைது

கயத்தாறில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மருத... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைமுயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகா் ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீச... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் அரசுக் கல்லூரி கட்டடத்துக்கு இடம் தோ்வு: எம்.பி., அமைச்சா் ஆய்வு

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக அனுமானித்துள்ள இடங்களை கனிமொழி எம்.பி. ஞாயிற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலுக்கு கூடுதலான சுற்றுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கூடுதலான சுற்றுப்பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இத்திருக்கோயிலுக்கு காா், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதி பாடலுக்கு மாணவிகள் நாட்டிய அஞ்சலி

மகாகவி பாரதியின் பாடல்களுக்கு நடனமாடி புகழஞ்சலி செலுத்தும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி ஈசா கேந்திரா கல்ச்சுரல் அகாடமி சாா்பில் எட்டயபுரம் பாரதியாா் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப... மேலும் பார்க்க

பனைத் தொழிலை ஊக்குவிக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

பனைத் தொழிலை ஊக்குவிக்க ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கப்படும் என, வேளாண் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்டுள்ளதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, தமிழ்நாடு பனை பாதுக... மேலும் பார்க்க