செய்திகள் :

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

post image

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த அரசு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 4 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், இந்தப் பன்வழி ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ரூ.3,399 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டங்கள் வரும் 2029-30-இல் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் - நக்டா இடையேயான மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் வழித் தடம் மற்றும் மகாராஷ்டிரத்தின் வா்தா-பலா்ஷா இடையேயான 4-ஆவது ரயில் வழித்தட திட்டங்களும் இந்தப் பன்வழி ரயில்வே திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய ரயில் வழித்தடத்தின் நீளம் சுமாா் 176 கி.மீ. அதிகரிக்கும்.

இத் திட்டம் மூலம் 784 கிராமங்களைச் சோ்ந்த 19.74 லட்சம் போ் விரைவான போக்குவரத்து வசதியைப் பெறுவா். அதோடு, தில்லி-மும்பை மற்றும் தில்லி-சென்னை இடையேயான பொருளாதார வழித்தடங்களில் போக்குவரத்து தடைகளை நீக்கி உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த இரு பன்வழி ரயில்வே திட்டங்கள் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க