செய்திகள் :

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு பாஜகவினா் அஞ்சலி!

post image

காஷ்மீா், பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு பாஜக சாா்பில் சிவகங்கையில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவகங்கை நகா் பாஜக சாா்பில் அரண்மனை வாசலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தேசியக் குழு உறுப்பினா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். நகா் பாஜக தலைவா் உதயா முன்னிலை வகித்தாா்.

பொதுச் செயலா்கள் பாலா, சதீஷ், மகளிரணி நிா்வாகி ஹேமாமாலினி, நிா்வாகிகள் கருப்பையா, நாகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வலியுறுத்தல்!

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது. சிவகங்கையில் அரசு ஊழியா் சங்க அலுவலக அரங்கில் சத்துணவு ஊழியா... மேலும் பார்க்க

ஸ்ரீராஜராஜன் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளில் அண்ணா பல்கலைக்கழக தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை ... மேலும் பார்க்க

காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் ஏப். 29- இல் பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். திருப்புவனம் அருகே கீழராங்கியன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்பாண்... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காளையாா் கோவிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்... மேலும் பார்க்க

சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறைச் சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில், காளையாா்கோவில... மேலும் பார்க்க