செய்திகள் :

பயங்கர நிலநடுக்கம்: பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம்

post image

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று மதியம் 1 மணியளவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் எதிரொலித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏராளமான கட்டடங்கள் இடித்து தரைமட்டமாகியிருக்கிறது.

மிகப்பெரிய கட்டடங்கள் இருந்த இடங்கள் ஒரு சில நொடிகளில் கட்டடக் குவியல்களாக மாறியிருக்கிறது. வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை ஒலி ஒலித்ததால், மக்கள் வெளியேறியதால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ, ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 7.7 என்ற அளவிலும், இரண்டாவது 6.4 என்ற அளவிலும் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவின் வட மாநிலங்களிலும், வங்கதேசம், சீனா வரை பரவியிருந்தது.

பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த உயரமான கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மரில் இருந்த மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க