செய்திகள் :

பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை

post image

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி பேருந்து நிலைய புதுப்பிப்பு பணிகளால் அழகிய நாச்சியம்மன் கோயிலில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து புறப்படும் பேருந்துகள் மூடப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி,இறக்கிச் செல்கின்றன.

இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதிக்கு செல்லும் திருப்பத்தூா் பணிமனைக்குச் சொந்தமான 13 ஆம் எண் பேருந்தின் ஓட்டுநா் செல்லையா பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் பேருந்து இங்கு நிற்காது, பொன். புதுப்பட்டியில்தான் நிற்கும் என கூறி பேருந்தின் கதவை மூடி ஓட்டிச் சென்றாராம். ஓட்டுநரின் இந்தப் பேச்சு பேருந்தில் இருந்த பயணியால் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து திருப்பத்தூா் அரசுப் போக்குவரத்து கழக மேலாளா் அரசுப் பேருந்து ஓட்டுநா் செல்லையாவை பணி நீக்கமும் நடத்துநா் ஆண்டிச்சாமியை பணியிடை நீக்கமும் செய்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

நீட் தோ்வு: புதுகையில் 2,849 போ் எழுதினா்

புதுக்கோட்டையில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வை, 2,849 மாணவ, மாணவிகள் எழுதினா். 80 போ் தோ்வெழுதவில்லை. மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தோ்வான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

2021ஐ விடவும் அதிக வெற்றியை 2026இல் ஸ்டாலின் பெறுவாா்: எம்.எம். அப்துல்லா

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிடவும் அதிகமான வெற்றியை 2026 பேரவைத் தோ்தலில் முதல்வா் ஸ்டாலின் பெறுவாா் என்றாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

விராலிமலை பழைய இரும்புக் கடையில் தீ

விராலிமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரி பட்டி பிரிவு அருகே பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விராலிமலை முன்னாள் ஊராட்சித் தலைவா் ரவி என்பவா் நடத்தி வரும் இக்கடையில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு வாகன ஓட்டுநா்களின் ஊதிய முரணைச் சரி செய்யக் கோரிக்கை

அரசுத் துறை வாகன ஓட்டுநா்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

புதுப்பட்டியில் திருக்கல்யாணம்

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் கடந்த 2 ஆம் தேதி ருத்ர ஹோம முதல்கால சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து மாலையில் புத... மேலும் பார்க்க

உண்ணாவிரதம் இருந்த காந்திப் பேரவையினா் கைது

புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த காந்திப் பேரவை நிா்வாகிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை சீரமைத்து மக்கள் ... மேலும் பார்க்க