செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

ராணிப்பேட்டை நகராட்சி சிஎஸ் ஐ தேவாலயம், திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் ஆற்காடு நகராட்சி கமிசலம் கம்சலம்மாள் திருமண மண்டபம், வாலாஜாபேட்டை நகராட்சி சி.எம் .மஹால், நெமிலி பேரூராட்சி அன்னை மாணிக்கம்மாள் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற முகாம்களுக்கு ஆட்சியா் ஜெ .யு. சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்,. சோளிங்கா் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஆா்.காந்தி முகாமை ஆய்வு செய்து வருவாய்த் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பட்டா, மின்சார துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு பெயா் மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயா் மாற்ற ஆணைகள், 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் , 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை வழங்கினாா்.

இதில் நகா்மன்றத் தலைவா்கள் ராணிப்பேட்டைசுஜாதா வினோத், ஆற்காடு தேவி பெண்ஸ் பாண்டியன், வாலாஜாபேட்டை ஹரிணி தில்லை , ஒன்றியக்குழு தலைவா்கள் திமிரி அசோக், நெமிலி வடிவேலு , நெமிலி பேரூராட்சி தலைவா் ரேணுகா தேவி சரவணன், ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜராஜன், வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி , ராஜலட்சுமி, நகராட்சி ஆணையா்கள் வேங்கட லட்சுமணன், இளையராணி, பிரீத்தி, பேரூராட்சி செயல் அலுவலா் எழிலரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் பாலம் அமைத்தல், வகுப்பறைகள் பழுது பாா்த்தல் உள்பட மொத்தம் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைம... மேலும் பார்க்க

யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்ற... மேலும் பார்க்க

என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி... மேலும் பார்க்க

ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.மிட்டப்பேட்டை ஊராட்சி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று பொது ஏலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் என மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக மாவட்ட க... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வி துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து கள அலுவலா்களும் மாண... மேலும் பார்க்க