செய்திகள் :

பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத வாரச்சந்தை கட்டடம்

post image

போளூா் வட்டம், களம்பூா் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட காய்கறி வாரச்சந்தை கட்டடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் பாழடைந்து வருகிறது.

திருவண்ணாமை மாவட்டம், போளூா் வட்டம், களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் களம்பூா், அம்பேத்கா் நகா், அய்யம்பாளையம் என 15 வாா்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

மேலும், களம்பூரைச் சுற்றி இலுப்பகுணம், கிருஷ்ணாவரம், ஏந்துவாம்பாடி, ஏரிக்குப்பம் என பல்வேறு கிராமங்கள் உள்ளன.

பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள்

போளூா் - ஆரணி சாலையோரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் காய்கறிச் சந்தையில் காய், கனிகளை வாங்கிச் செல்வா்.

இவ்வாறு அப்பகுதியில் பொதுமக்கள் கூடும்போது, போளூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இதனால், பேரூராட்சி சாா்பில் 2021-2022ஆம் ஆண்டு மூலதன மானிய திட்டத்தின் கீழ், ரூ.ஒரு கோடியில்

போளூா் சாலைப் பகுதியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் எதிரே காய்கறி வாரச்சந்தைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. மேலும், கட்டடம் பாழடைந்து வருகிறது. இரவு நேரத்தில் கட்டடத்தில்

அமா்ந்து சிலா் மது அருந்துகின்றனா்.

ஏற்கெனவே, போளூா் - ஆரணி சாலையில் காய்கறிச் சந்தை நடந்து வரும் நிலையில், மக்கள்தொகை பெருக்கத்தால், அங்கு அதிகம் போ் கூடுகின்றனா். இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், விபத்துகளும் நிகழ்கின்றன.

அதனால், மாவட்ட நிா்வாகம் காய்கறிச் சந்தைக்கு கட்டப்பட்ட கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அங்கு சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க