செய்திகள் :

``பயிற்சி, ஊக்கம் கொடுத்தால் ஆப்பிள் சாகுபடியில் வருவாய் ஈட்ட முடியும்'' -கொடைக்கானல் விவசாயி சாதனை

post image

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் தட்ப வெப்பநிலை இங்கும் இருக்கிறது என்பதை மெய்பிக்கும் விதமாக ஆப்பிள் விளைவித்து காட்டியுள்ளார் மூர்த்தி.

இது குறித்து நாம் பேசியபோது மூர்த்தி கூறுகையில், "2011 லிருந்து ஆப்பிள் விளைவிப்பது பற்றி பயிற்சிகளை எடுத்து 2015-ல் ரெட் டெலிசியஸ், டார்செட் கோல்டன் ரக ஆப்பிள் மரக்கன்றுகளை வாங்கி வந்து என்னுடைய தோட்டத்தில் நட்டு வைத்தேன். முழுக்கவும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். 3-வது ஆண்டில் இருந்து மகசூல் கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் மரத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள ஆப்பிள்கள்

பிப்ரவரியில் பூக்கள் பூக்கத் தொடங்கி, ஏப்ரலில் காய்கள் வரத் தொடங்கும். ஜூன் முதல் ஆப்பிள்கள் அறுவடைக்கு தயாராகும். ஆப்பிளின் நிறத்தை வைத்து அதன் இனிப்பு சுவை, அறுவடைக்கு தயாராகி விட்டதா என்பதை அறிய முடியும். ஒரு மரம் 15 அடி வரை வளரும். நன்கு முதிர்ந்த ஒரு மரத்தில் இருந்து குறைந்தது 20 கிலோ, அதிகபட்சமாக 40 கிலோ வரை ஆப்பிள் அறுவடை செய்யலாம். ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை கொடைக்கானலில் உள்ளது.

தோட்டக்கலைத் துறை மூலம் தொழில்நுட்ப ஆலோசனை, முறையான பயிற்சி அளித்து, விவசாயிகளை ஊக்குவித்தால் ஆப்பிள் சாகுபடியிலும் வருவாய் ஈட்ட முடியும்" என்றார் மூர்த்தி.

கொடைக்கானலில் ஆப்பிள் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது, " நிறைய விவசாயிகள் இதை விளைவிக்க பயிற்சிகள் எடுத்தனர். காலநிலை மாற்றம் காரணமாக மற்ற விவசாயிகள் இதிலிருந்து வெளியேறினர் மூர்த்தி மட்டும் இதை தொடர்ந்து செய்து தற்போது சாகுபடிக்கு தயாராக உள்ளது. குங்குமபூவும் இவருடைய தோட்டத்தில் விளைவிக்கிறார் மற்ற மாநிலங்களில் விளையும் குங்குமபூவை விட இங்கு பெரிதாகவே வளருகிறது .

விவசாயி மூர்த்தி

தமிழக அரசு ஆப்பிள் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு தோட்டக்கலை மூலம் முறையான ஆய்வு செய்து ஆப்பிள் விவசாயத்தை கொடைக்கானலில் ஊக்குவிப்பதற்கு முன்வர வேண்டும் இதன் மூலம் நிறைய விவசாயிகள் ஆப்பிள் விளைவிக்க முன்வருவார்கள்" என்றார்.

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தி... மேலும் பார்க்க

``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.." - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான "பொற்காலம்" இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். 'தி எமர்ஜென்சி டைரீஸ் - இயர்ஸ் தட்... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் மரணம்: ``பணியிடைநீக்கம் மட்டுமே நீதியா? கொலை வழக்கு பதியாதது ஏன்?'' - சீமான்

கடந்த 4 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்றும், அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும் அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்... மேலும் பார்க்க

`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்... மேலும் பார்க்க

Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் திருத்தப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளது அந்த மாநில பாஜக தலைமையிலான அரசு. எதிர்காலத்தில் மொழிக்கொள்கையை எப்படி செயல்படுத்... மேலும் பார்க்க