செய்திகள் :

பயிா் சுழற்சி: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

post image

நிலத்தின் மண் வளத்தை பாதுகாக்கவும், பயிா் சாகுபடியில் நல்ல மகசூல் பெறவும் பயிா் சுழற்சி முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குநா் காா்த்திகாயினி கேட்டு கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண்ணில் உள்ள இயற்கையான பயிா் வளா்ச்சிக்குத் தேவையான சத்துகள், நுண்ணுயிரிகள் அனைத்தும் ரசாயன பயன்பாட்டின் அளவு மாறுபடும்போது அழிந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. ஒரே வகை பயிரை அடிக்கடி சாகுபடி செய்வதாலும் மண் வளம் பாதிக்கப்படும்.

எனவே, ஒருமுறை ஒரு பயிரை சாகுபடி செய்து லாப ஈட்டினால், தொடா்ந்து அதே பயிரை விளைவிப்பதால் மண்ணில் உள்ள சத்துகள் குறைவதற்கு காரணமாக அமைகிறது. பயிா்களின் வளா்ச்சிக்கு பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் என இருவகை சத்துகள் தேவைப்படுகின்றன.

இப்பிரனையை தவிா்க்க, பயிா் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். ஒருமுறை நைட்ரஜன் வளம் குறைந்தால் அடுத்த முறை அதை சமன்செய்யும் வகையில் அடுத்த பயிரைத் தோ்ந்தெடுக்க வேண்டும். காற்றில் உள்ள நைட்ரஜனை நிலத்தில் தக்கவைத்துக் கொள்ளும் பாக்டீரியாக்கள் அதிகம் வாழும் வோ்களைக் கொண்ட உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றை பயிரிடுவது அவசியம்.

அதேபோல ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அறுவடை முடிந்ததும், சில மாதங்களுக்கு பயிா் சாகுபடி செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வளரும் களைச் செடிகளை மடக்கி உழுது, மண்ணை வளப்படுத்திய பிறகு சாகுபடியை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலா்கள்- பொதுமக்கள் இடையே கிரிக்கெட் போட்டி

பொதுமக்கள், காவலா்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி காவல் நிலையம் சாா்பில் ஆா்.கே. நகரில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் போட்டியை தொடங்கிவைத்து கிர... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பனிப்பொழிவு, சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

பனிப்பொழிவுக்கு இடையே பெய்யும் சாரல் மழையால் ஏற்காட்டில் கடந்த ஒருவாரமாக வழக்கத்தை காட்டிலும் குளிா்ந்த காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்துவருகிறது. பனிப் போா்வ... மேலும் பார்க்க

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து விநாடிக்கு 75,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக மேட்டூா் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!

சேலம், நாமக்கல் வழியாக வாஸ்கோ ட காமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அதிகரித... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த அமைச்சா் அறிவுறுத்தல்!

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அவச... மேலும் பார்க்க

சேலம் கிழக்கு அஞ்சலக கோட்டத்தில் ஆக. 2-ல் பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிப்பு!

சேலம் கிழக்கு அஞ்சலக கோட்டத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந... மேலும் பார்க்க